Friday 31 January 2014

முத்திரை..!





                       முத்திரை..!


முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.





2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.




3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.




4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.


5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.


6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.


7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.


.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.


10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.


Saturday 25 January 2014

வசியம்

வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.

   

தயவு செய்து யாரும் இந்த அறிய கலையை தவறாக பயன் படுத்த வேண்டாம். வசியம் நல்லதுக்கு பயன் படுத்தவும்.

இங்கு கொடுக்க பட்டுள்ள முறைய பயன் படுத்தினால் யாரை வேண்டுமானாலும் 48 நாள்களுக்குள் வசியம் செய்து விடலாம் ஆனால் தவறாக பயன் படுத்துவோர் வாழ்கையில் மிகவும் துன்பபடுவர். இது அனுபவ உண்மை.

நாம் யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவரின் புகைப்படம். அவரின் பெயர் மற்றும் அவரின் வியர்வை பட்ட துணி. இவைகள் முக்கியமாக தேவை படும்.
தினமும் இரவு சரியாக 11 மணி முதல் 12க்குல் இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் செய்ய வேண்டும்.

தேவையான பூஜை பொருட்கள்
மல்லிகை பூ 
தொட்டல்கால்  வாடி (வேர் )
மல்லிகை உதுபத்தி
நல்ல மனமுள்ள சாம்பிராணி 
சக்கரை பொங்கல் 
தேங்காய்
மூல மந்திரம் 
ஓம் க்லீம் கமதேவய ....................மம வசம் குரு குரு ஸ்வாக

(வசியம் செய்பவரின் பெயர் )

ஒரு மனையில் பூஜை பொருட்கள் வசியம் செய்பவரின் பொருட்கள் அனைத்தையும் வைத்து வடக்கு நோக்கி அமர்ந்து மூல மந்திரத்தை தினமும் 234 முறை உச்சரிக்க வேண்டும். 49வாது நாள் வசியம் செய்பவரின் முன் சென்று அவரின் கண்களை பார்த்து மூல மந்திரத்தை 9 முறை மனதுக்குள் உச்சரித்தல் அவர் வசியம் ஆகி நாம் சொல் வதை கேட்க ஆரம்பிப்பர். ஆன்ம சக்தி உள்ளவர்களை வசியம் செய்ய யந்திர தகடு மற்றும் தொட்டல்கால்  வாடி மூலிகை பிரயோகம் தேவை படும்.


Wednesday 22 January 2014

நோக்கு வர்மத்தில் மூலிகை பிரயோகம்

வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.


நோக்கு வர்மத்தில் மிகவும் முக்கியமான ஒன்று கண்களுக்கான பயிற்சி. கண்களின் வலிமை மூலமாக மட்டுமே நோக்கு வர்மத்தை நம்மால் அடைய முடியும். அதற்கு வெறும் பயிற்சி மட்டும் போதாது மூலிகையின் துணை மிகவும் முக்கியமானது.

சித்தர்களும் குருமார்களும் ரகசியமாக பாதுகாத்து வந்த ரகசியங்கள் அழிய கூடாது என்ற நோக்கில் இந்த பதிவை வெளியிடுகிறேன். தயவு செய்து தவறாக பயன் படுத்த வேண்டாம்.
                                       

எதை சொன்னாலும் செய்யும் நத்தை சூரி மூலிகை தான். நோக்கு வர்மா பயிற்சி மூலிகை யாகும். சாபம் இல்லாத மூலிகையாகும். இதற்கு காப்பு கட்டி தான் எடுக்க வேண்டும் என்று இல்லை.

நத்தை சூரியின் வேரினை எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரும்பு இல்லாத ஆயுதங்களால் நறுக்க வேண்டும். அதனுடைய வேரினை நன்றாக மென்று சிறிது உமிழ் நீரினை குடித்து விட்டு வை முழுவது அந்த வேரின் சாறு படும் படி வைத்து விட்டு பிறகு விளக்கு பயிற்சி செய்ய வேண்டும்.

இந்த ஆரம்பா பயிற்சியினை செய்து வந்தாலே நோக்கு வர்மத்தில் ஓரளவு உங்களால் செய்ய முடியும். மற்ற பயிற்சிகளை வெளிபடையாக சொல்லுவதற்கு எனக்கு அனுமதி இல்லை தேவை படுவோர் அதற்கான தகுந்த காரணத்தை வெளியிடவும் அதன் பிறகு அவர்களுக்கு மட்டும் மந்திரம் மூலிகை மற்ற பயிற்சி மற்றும் பிரயோக முறை கற்று தரப்படும்.

                    முயற்சி செய்தல் முடியாதது ஒன்றும் இல்லை

சிந்தனைகள் துளிர்கள்


                   NEVER GIVE UP  DON'T GIVE UP

முதல் அடி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்

    


ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி

விட முயற்சி 
             

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln.


வெற்றியாளர்

வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த
முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
- Napoleon Hill.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- George Washington Carver.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers.

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
- George Bernard Shaw.

வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்

தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

உயர்வு 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.



உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!

- கவிஞர் கண்ணதாசன்.

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது! -புத்தர்

அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். -கார்ல் மார்க்ஸ்


ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். -இங்கர்சால்

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். - சாக்ரடிஸ்


பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! -அம்பேத்கர்

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்

ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்! -பெரியார்

சுவாமி சுகபோதானந்தா.

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

- சுவாமி சுகபோதானந்தா.


வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்

நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.
உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: "வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது."
- W. Clement Stone

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
- Albert Einstein

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு -கிளப்டைன்

இரவு எனும் காராக்கிரகம் நம்மைச் சூழ்ந்திடும்போதெல்லாம், காலைப் பகலவனின் அற்புத வெளிச்சம் நம்மை நெருங்கிவிட்டது என்பதே அர்த்தம்!' - நேதாஜி

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். - சுவாமி விவேகானந்தர்

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். - பான்னி ப்ளேயர் எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்

கீழே விழாமல் இருப்பதில் பெருமையில்லை. விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை! >ஹ்யூம்

துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் – மாஸிங்கர்

இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.
ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?


செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது -கதே

Monday 20 January 2014

நோக்கு வர்மம் 2



வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.



நோக்கு வர்மத்தில் நாம் பயிற்சி செய்த ஒற்றை கரும் புள்ளி பயிற்சி பிறகு இன்று நாம் பயிற்சி செய்ய போகுவது விளக்கு பயிற்சி. விளக்கு பயிற்சி செய்யும் முன் நாம் நமது கண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதாவது கண்கள் மிகும் முக்கியமான ஒன்று நாம் இந்த பயிற்சி செய்யும் காலத்தில் நமது கண்கள் மிகவும் உஷ்ணம் அடைந்து கண்களில் எரிச்சல் மற்றும் தண்ணிர் வரும் இதன் காரணமாக கண்கள் பதிப்புக்கு உள்ளாகும் அதனால் வாரத்தில் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் கண்களுக்கு எண்ணெய் விட வேண்டும்.

அப்போது தான் கண்கள் தாங்கும் வலிமை பெரும். அடுத்த படியாக கிழக்கு நோக்கி அமர்ந்த படி கண்களை முடி கொண்டு மனதினை அமைதி படுத்தி கொண்டு. பிறகு நேராக நிமிர்ந்த நினையில் ஒரு மண் விளக்கை தீபம் ஏற்றி அதனுடைய  ஒளியின் மேல் சுடரை உற்று நோக்கிய படி
                          ஓம் அக்னி தேவய நாம
                          ஓம் விளக்கின் ஒளியே
                          ஓம் சிவாய நாம
                          ஓம் வசி வசி மசி மசி
   

என்று 108 முறை கண்களை முடாமல் மந்திரத்தை உச்சரித்து விட்டு பிறகு கண்களை முடிய நிலையில் ஒளியின் சுடரை நெற்றி பொட்டின் மையத்தில் வைத்து அதை பார்த்த படி அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு அடுத்த 10 நிமிடம் கழித்து அடுத்த பயிற்சியை தொடர வேண்டும்

PAC-MAN


கொஞ்சம் ரெஸ்ட்! 

ரொம்ப பயிற்சி பண்ணி கலைத்து போயிருபிங்க கொஞ்சம் விளையாட கேம்ஸ் 







     
http://web2.server7.devteam.dk/pacman/pacman.html?LANG=en

(or copy to paste this link to browser)
இந்த லிங்க் கிளிக் பண்ணி விளையாடுங்க.

Thursday 16 January 2014

நோக்கு வர்மம் 1


வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.


சென்ற பதிவில் நாம் நோக்கு வர்மத்தில் தியானம் மற்றும் பிரணயாமம் பற்றி பார்த்தோம் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது கண்களுக்கான பயிற்சி.

மனோவசியம் மற்றும் நோக்கு வர்மம் பழகுவதற்கு பயிற்சி மற்றும் மந்திரம் முக்கியமானது. மந்திரத்தின் துணை இல்லாமல் மனோவசியம் மற்றும் நோக்கு வர்மம் பழக முடியாது இதை யாரும் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம். மனிதனின் சக்தி வெளிபடுதவே இந்த ரகசியங்களை வெளி இடுகிறேன்.

இதை பழக நினைபவர்கள் முதலில் விநாயகரை பூஜை செய்து அவரின் ஆசிர்வாதத்துடன் துவங்கும் பொது வெற்றி நிச்சயம்.




தினமும் காலையில் கோவில்கு சென்று அல்லது விட்டில் விநாயகர் சிலை முன்பு எருக்கன் பூவை சமர்ப்பணம் செய்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். எதாவது ஒரு சித்தர்களின் நாமத்தை சொல்லிவிட்டு பிறகு கணபதியை பூஜை செய்யவும்.

                                         


     
ஒரு வெள்ளை சுவரில் இதை போலவே வரைந்து அதை உற்று நோக்கிய படி ஓம் சிவாய நமக என்று 108 முறை வாய் விட்டு உச்சரித்து விட்டு பிறகு. ஓம் ரீம் கரும் புள்ளியே என் விழிகளின் வசமாகுக என்று கண்களை விரித்த நிலையில் உற்று நோக்கிய படி 54  முறை வாய் விட்டு உச்சரிக்க வேண்டும். பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு 5நிமிடம் கண்களை மூடிவிட்டு பிறகு தான் அடுத்த பயிற்சியை தொடர வேண்டும்.


மேல உள்ள பயிற்சியை தினமும் 2 வேலைகள் உடல் சுத்தி மற்றும் மன சுத்தியுடன் செய்ய வேண்டும். 

நன்றி!

நோக்கு வர்மம்

வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.

இன்றைக்கு எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும் நமக்குன்னு ஒரு பவர் வேண்டுமென்று. சில பேர் நம்புவார்கள் பவர் இருக்குனு சில பேர் இல்லைனு நினைப்பாங்க, ஆனால் நீங்க என்ன நீனைய்க்ிறீங்க.

நம்மனாலையும் முடியும் நம்புறவங்க மேலும் படிங்கள்

முதலில் சுலபமான ஒன்றை பற்றி பார்போம்

அது தான் மனோவசியம்.

அடுத்தவர்களை நமது சொல்படி இனங்க செய்வது மனிதர்கள் மற்றும் விலங்குகள். இதை பெரும்பாலும் ஒத்துகொண்டார்கள் முடியும் என்று
முடியாது என்று நினைபவர்கள் கொஞ்சம் யோசிக்கவும். நமது கண்கள் எதை பார்க்கிறதோ அல்லது நாம் எதை உணர்கிறோமோ அதை உண்மை என்று நமது மனம் நம்புகிறது.


அப்படி இருக்கும் பொழுது நமது கண்களின் சக்தியாலும், ஆன்ம மற்றும் ஆள்மன  சக்தியாலும் அடுத்தவரின் மனநிலையை ஏன் மாற்ற முடியாது. உதரணமாக நாம் அடுத்தவரை கோவமான அல்லது இனிமையான சொல் கொண்டு பேசும் பொழுது அது அவரின் மன நிலையை பாதிக்கும். அதே உணர்வை நாம் நம் கண்கள் மூலமாக செலுத்தும் பொது அவர் அதை உணர முடியும்.

இதற்கு மேலும் விளக்கம் கொடுக்க முடியும் ஆனால் என்னோட தமிழ் படிபவர்களுக்கு புரிய வேண்டும் மற்றும் இப்ப இருக்குற நேரத்தில் யாருமே பொறுமையாக படிக்க முடியாது எனவே வெகு சுலபமாக புரிந்து கொள்ளும் வண்ணம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.   

நாம் சித்தர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும் சித்தர்களுக்கு சக்தி இருந்தது என்று அனைவரும் ஒத்து கொள்வார்கள். அவர்களும் மனிதர்கள் தான் அப்பறம் எப்படி அவர்களுக்கு சக்தி இருந்தது என்று யோசித்தால் விடை மிக சுலபம். அவர்கள் அவர்களுடைய பிராணனை மற்றும் மனதினை முழுமையாக கட்டு படுத்தியவர்கள். இன்றும் நிறைய பேர் கட்டுபடுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.




நோக்குவர்மம் கலையின் பிரிவுகளில் ஒன்று தான் மனோவசியம். மனோவசியம் பழக வர்மக்கலை தெரிந்து இருக்க வேண்டும் என்று இல்லை. தன்னுடைய மனதை கட்டுபடுத்த முடிந்த அனைவராலும் அடுத்தவர்களின் மனதை கட்டுபடுத்த முடியும். மனோவசியம் பழக வேண்டும் என்றால் நோக்கு வர்மத்தில் இருந்தே ஆரம்பிக்கபடும்.
இதனுடைய சில பிரிவுகள் தான் hypnotism and mesmerism 

இதை பழகுவதற்கு சரியாக 60 நாட்கள் போதுமானது ஆனால் விடா முயற்சியுடன் பழக வேண்டும்.

இதற்கு நம்பிக்கை, முயற்சி, பயிற்சி முக்கியம். மற்றும் குருமுலமாக தான் பழக வேண்டும் இதை பழக நினைபவர்கள் எதாவது ஒரு சித்தரை உங்களின் மானசிக குருவாக ஏற்றுக்கொண்டு அவர்களின் ஆசியுடனே பழக வேண்டும். திருமணம்  ஆனவர்கள் பழகுவது சற்று கடினம் ஆனால் முயற்சி செய்தால் முடியாது என்று ஒன்றும் இல்லை.

இதை பழக வேண்டும் என்று நினைபவர்கள் உங்களுடைய கேள்விகளை கேட்கவும்.

Friday 10 January 2014

மனோவசியம் மற்றும் நோக்குவர்மம்

வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.



மனோவசிய கலையில் முதலில் நாம் செய்ய வேண்டியது நமது மனதையும் உடலையும் கட்டுபடுத்துவது.


நமது மனதை கட்டு படுத்த முடியாமல் அடுத்தவர்களின் மனதை கட்டுபடுத்த முடியாது. மனதை கட்டுபடுத்த தியானம் சிறந்த வழி.தியானம் செய்வது பற்றி நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள் எனவே அதை பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறன். அனால் என்னுடைய குரு தியானம் செய்வதற்கே என்னுடைய எலும்புகளை உடைத்து விட்டார். அதனால் தியானத்தின் அடுத்த படியான குண்டலினி முக்கியமானது நமது உடலில் உள்ள சக்கரங்களை எழுப்புவதன் முலமாக மனோவசியம் மிக விரைவில் பழக முடியும்.

குண்டலினி குரு மூலமாக  மட்டுமே பழக முடியும் அதனால் அருகில் உள்ள தியான மையத்திற்கு சென்று குண்டலினி பழகுங்கள். குரு நினைத்தால் நமது குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் எழுப்ப முடியும்.

மனதை கட்டுபடுத்த பழகி விட்டவர்கள் தியானம் நன்றாக கடைபிடிக்க முடியும் என்றால் அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்லலாம். முடியவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் அதற்கு தேவையான மந்திரங்களை கூறுகிறேன் முடியாதவர்களுக்கு மட்டும். அதற்கு முதலில் நமது மனதின் மூலமாக அடுத்தவர்களின் மனதை கட்டுபடுத்த தேவையான பயிற்சி பிரணயாமம், உயிர் சக்தியை அதிக படுத்துதல்.


காலையில் 4.30 மணிக்கு காலைகடன் அனைத்தையும் முடித்து விட்டு பிரம்ம மூகூர்தமான  4.30 மணிக்கு முதுகை கூன் போடாமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு கட்டைவிரலால் வலது நாசி துவாரத்தையும் மோதிர விரலால் இடது நாசி துவாரத்தையும் மூடவேண்டும். முதலில் வலது நாசி மூடி இடது நாசி துவாரத்தின் வழியாக அனைத்து காற்றையும் வெளியே விட வேண்டும். பிறகு அதே நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து வலது நாசி துவாரத்தின் வழியாக  வெளியே விட வேண்டும். பின்பு வலது நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து இடது நாசி துவாரத்தின் வழியாக  காற்றையும் வெளியே விட வேண்டும். இதே போல் 6 தடவை செய்தால் போதுமானது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிக படுத்தி கொள்ளலாம்.


அடுத்த படியாக    இரண்டு மூக்கின் வழியாக  காற்றை இழுத்து அதை அடிவயிற்றில் நிறுத்தி மெதுவாக  வாய் வழியாக விடவேண்டும் இதையும் 6 தடவை செய்ய வேண்டும் பிறகு அதிக படுத்தி கொள்ளலாம்.
இதன் மூலம் நமது உடலில் அதிக படியான electro magnetic waves an cosmatic energy கிடைக்கும். இந்த பயிற்சியை முறையாக செய்பவர்களால் மட்டுமே மனோவசியத்தை பழக முடியும். நான் சொல்லிகொடுக்கும் பாடம் மற்றும் பயிற்சி உங்களுக்கு புரிகிறதா அல்லது புரியாவிடில் கேட்டுக்கொள்ளவும்.

இந்த பாடம் பற்றிய உங்களுடைய கருத்துகளை  தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் பிறகு அடுத்த பயிற்சியை  போடுகிறேன்.