Tuesday 13 January 2015

நோக்கு வர்மம் இலவச வகுப்பு ஆரம்பமாக போகிறது

வணக்கம்  என்னுடன் படித்த எனது நண்பர் விரைவில் நோக்கு வர்மம் அனைவருக்கும் கற்று தர போகிறார் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் அதற்கான வீடியோ பதிவுகளை எடுத்து கொண்டு இருக்கிறார் விரைவில் அதனை வெளியிட உள்ளார் அனைவரும் பயிற்சி செய்து பயன் பெறுங்கள்


விரைவில்  Youtubeல் கற்றுக்கொள்ளுங்கள்


அதுவரை யாரும் போன் செய்ய வேண்டாம். என்னால் ரகசியங்களை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனது நண்பர் அனைத்தையும் தெளிவு படுத்துவர் விரைவில்

Monday 1 September 2014

அமானுஷ்ய ரகசியங்கள்

பல வருட தேடி குருவின் அருளோட கிடைத்த விசியங்கள். அனால் சித்தர்கள் மறைத்த மற்றும் மறைபொருளாக குரிய விசியத்தை தெளிவாக குறி இருந்த புத்தகம் இந்த அமானுஷ்ய ரகசியங்கள்.. நான் படித்து பார்த்து நம்பா முடியாத பல விசியங்களை விலகிய இந்த புத்தகத்தை படித்து பயன் பெறுங்கள்...


https://www.facebook.com/manoharbookseller?fref=photo


Friday 6 June 2014

மனிக்கவும் தவறாக இந்த கலையை பயன் படுத்துவதால் என்னுடைய குரு எனக்கு ரகசியங்களை வெளியிட அனுமதி மறுத்து விட்டார்

மனிக்கவும் தவறாக இந்த கலையை பயன் படுத்துவதால் என்னுடைய குரு எனக்கு ரகசியங்களை வெளியிட அனுமதி மறுத்து விட்டார் 

உண்மையாக தவறான முறையில் பயன் படுததவர்களுக்கு இந்த கலை கற்று கொடுக்க படும்



தயவு செய்து யாரும் தொலைபேசியில் கேட்க வேண்டாம் என்னுடைய குரு அனுமதி அளித்தால் கண்டிப்பாக அனைவர்க்கும் கற்றுகொடுக்க படும் நன்றி.

Saturday 1 February 2014

தொப்பை குறைய எளிய பயிற்சி..!



இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.



அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!


அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.



நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.



பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

Friday 31 January 2014

முத்திரை..!





                       முத்திரை..!


முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.





2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.




3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.




4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.


5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.


6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.


7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.


.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.


10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.


Saturday 25 January 2014

வசியம்

வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.

   

தயவு செய்து யாரும் இந்த அறிய கலையை தவறாக பயன் படுத்த வேண்டாம். வசியம் நல்லதுக்கு பயன் படுத்தவும்.

இங்கு கொடுக்க பட்டுள்ள முறைய பயன் படுத்தினால் யாரை வேண்டுமானாலும் 48 நாள்களுக்குள் வசியம் செய்து விடலாம் ஆனால் தவறாக பயன் படுத்துவோர் வாழ்கையில் மிகவும் துன்பபடுவர். இது அனுபவ உண்மை.

நாம் யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவரின் புகைப்படம். அவரின் பெயர் மற்றும் அவரின் வியர்வை பட்ட துணி. இவைகள் முக்கியமாக தேவை படும்.
தினமும் இரவு சரியாக 11 மணி முதல் 12க்குல் இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் செய்ய வேண்டும்.

தேவையான பூஜை பொருட்கள்
மல்லிகை பூ 
தொட்டல்கால்  வாடி (வேர் )
மல்லிகை உதுபத்தி
நல்ல மனமுள்ள சாம்பிராணி 
சக்கரை பொங்கல் 
தேங்காய்
மூல மந்திரம் 
ஓம் க்லீம் கமதேவய ....................மம வசம் குரு குரு ஸ்வாக

(வசியம் செய்பவரின் பெயர் )

ஒரு மனையில் பூஜை பொருட்கள் வசியம் செய்பவரின் பொருட்கள் அனைத்தையும் வைத்து வடக்கு நோக்கி அமர்ந்து மூல மந்திரத்தை தினமும் 234 முறை உச்சரிக்க வேண்டும். 49வாது நாள் வசியம் செய்பவரின் முன் சென்று அவரின் கண்களை பார்த்து மூல மந்திரத்தை 9 முறை மனதுக்குள் உச்சரித்தல் அவர் வசியம் ஆகி நாம் சொல் வதை கேட்க ஆரம்பிப்பர். ஆன்ம சக்தி உள்ளவர்களை வசியம் செய்ய யந்திர தகடு மற்றும் தொட்டல்கால்  வாடி மூலிகை பிரயோகம் தேவை படும்.